சென்னை, அக். 4- ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப்புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இந்த தொழிற் சாலையை கடந்த 1955ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு தொடங்கி வைத்தார்.
தொடக்கத்தில், ரயிலின் உட்புற பாகங்கள் பொருத் தும் தொழிற்சாலையாக இருந்தது. அதன்பிறகு, படிப் படியாக உயர்ந்து, ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற் சாலையாக உயர்ந்தது. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வேக்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும், இங்கு தயாரிக்கப்படுகின்ற ரயில் பெட்டிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பயணிகளின் தேவை மற்றும் காலத்துக்கு ஏற்றபடி, அதிநவீன ரயில் பெட்டி, சுற்றுலாவுக்கான ரயில் பெட்டி உட்பட 50 வகைகளில் 600 வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், “ரயில் -18’ திட்டத்தில் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கு உலகத்தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டன. அய்சிஎப்இல் 1955ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை 70 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளது.
அண்மையில் 3ஆவது வந்தே பாரத் ரயில் தொடர் தயாரித்து வழங்கப்பட்டது. இந்த ரயில் தற்போது குஜராத் மாநிலம் காந்திநகர் - மும்பை இடையே இயக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் (2022-2023) 50 வடிவமைப்புகளில் 3,500 ரயில் பெட்டிகள் தயாரிக்கவும், 27 வந்தே பாரத் ரயில் தொடர்கள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி காலத்துக்கு ஏற்ப, பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களோடு முன்னேறி வரும் அய்சிஎப். ஞாயிறன்று (அக். 2) 67ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
No comments:
Post a Comment