புதுடில்லி,அக்.4- ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3இல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று (3.10.2022) மேலும் கூறியுள்ளதாவது:
பீகாரின் மோகமா மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகள், மகாராட்டிராவில் (கிழக்கு) அந்தேரி, அரியாணாவில் ஆதம்பூர், தெலங்கானாவில் முனுகோட், உ.பி.யில் கோலா கோரக்நாத் மற்றும் ஒடிசாவில் தாம்நகர் பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3இல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 6இல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 6 மாநிலங்களில் காலியாக வுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத் துவது தொடர்பான விரிவான அறிவிக்கை அக்.7இல் வெளியிடப்படும். இவ்வாறு ஆணையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் 461 பேருக்கு கரோனா தொற்று
சென்னை, அக்.4 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 461 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 461 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 97 பேர், செங்கல்பட்டில் 40 பேர், கோவையில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒரேநாளில் 537 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 415 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வரு கின்றனர். மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment