தமிழ்நாட்டில் புதிதாக 279 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 279 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை,அக்.17- தமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஆண்கள் 167, பெண்கள் 112 என மொத்தம் 279 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 67 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 89,013 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 46,850 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று (16.10.2022)  மட்டும் 326 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 4,115 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழ்நாட்டில் நேற்று மேனாள் கரோனா தொற்று பாதிப்பு 285 ஆகவும், சென்னையில் 70 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 2,401 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 26,625 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,373 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 219.32 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment