இணையேற்பு விழா: கழக பிரச்சார செயலாளர் நடத்தி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

இணையேற்பு விழா: கழக பிரச்சார செயலாளர் நடத்தி வைத்தார்

கல்பாக்கம், செப். 14- 11.9.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஏ.கே.ஆர். திருமண மண்ட பத்தில் க.குசன் - ஏ.சரண்யா ஆகியோரின் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகர தலைவர் மா.விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் தலை மையில் பொதுக்குழு உறுப்பினர் பக்தவத்சலம், மாவட்ட துணை தலை வர் நெல்லை சாலமன், நகர செயலாளர் விடுதலை சாமு, நீலமேகன், கோவிந் தசாமி, பேரானந்தம் ஆகி யோர் முன்னிலையில் செங்கை தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பா ளர் ப.அப்துல்மாலிக், செய்யூர் விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, விசிக ஒ.மா.அ. வெற்றிவேந்தன், மதன் திமுக, தாமோதரன் புதுப்பட்டிணம்திமுக ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ. மதிவதனி சுய மரியாதைத் திருமணம் ஏன் என உரை ஆற்றி னார், கொள்கை பரப் புரை செயலாளர் வழக் குரைஞர் அ.அருள் மொழி சிறப்புரை ஆற்றி இணையேற்பு விழா வினை நடத்தி வைத்தார். மணமக்கள் க.குசன்-ஏ.சரண்யா ஆகியோர் உறுதிமொழி கூறி மாலை மாற்றிக் கொண்டனர் மோதிரம் மாட்டிக் கொண் டனர் தங்க செயின் அணிந்து கொண்டு இணையேற்பு விழா சிறப் பாக நடைபெற்றது செ ய்யூர் பெரியார் வாசன்,  வினோத், மாவட்ட செயலாளர் செம்பியன், மாவட்ட அமைப்பாளர் பொன். இராசேந்திரன், செங்கை நகர செயலாளர் கவிஞர் யாழன், புதுப் பட்டிணம் விசிக ஆத வன், உதயகுமார், ராமச் சந்திரன், மற்றும் குடும்பத் தினர் கொள்கை உறவு கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மணமகன் க.குசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment