காஞ்சிபுரம், செப். 14- 20ஆவது தென்னிந்திய தேகு வாண்டோ போட்டிகள் செப்டம்பர் 10 & 11ஆகிய நாட்களில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சென்னுபட்டி ராமகோட்டய்யா உள் விளையாட்டு அரங்கில் மாஸ்டர் பி.வி. ரமணய்யா, மாஸ்டர் டி.வி.வி. பிரசாத் ஆகியோர் ஒருங்கி ணைப்பில் நடைபெற்றது.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங் களில் இருந்து சுமார் 200 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அணி மாஸ்டர் ஜி. பால கிருஷ்ணன் தலைமையில் விஜயவாடா சென்றது. காஞ்சிபுரத்திலிருந்து முனைவர் பா. கதிரவன் தலைமையில் 13 போட்டி யாளர்கள் பங்கேற்றனர். பா.சந்தோஷ், கபிலன், கார்த்திகேயன், தினேஷ், பிரவின், லோகேஷ், விக் னேஷ், ரோஹித் பிரசாத், சரவணன், கவுதம் பிரசாத், நந்த குமார், ரஞ்சித், சஞ்சித் ஆகியோர் தனிப்போட்டி, குழுப் போட்டிகளில் பங்கேற்று 12 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உள் ளிட்ட 14 பதக்கங்களை வென்று சாதனை படைத் தனர்.
இவர்களுக்கு, மாவட்ட தேகுவாண்டோ சங்கத்தின் புரவலர் சட்ட மன்ற உறுப்பினர் சி.வி. எம்.பி.எழிலரசன், மாவட்ட தேகுவாண்டோ சங்கத்தின் தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், துணைத் தலைவர் பா. ஜெயக்குமார், பொருளா ளர் ப. பரணிதரன் ஆகி யோர் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்
No comments:
Post a Comment