பரங்கிப்பேட்டை ஒன்றிய கழகத் தலைவர் மஞ்சை அழகரசன் (எ) சுந்தரமூர்த்தி (வயது 82) மஞ்சக் குழியில் 13/9/2022 அன்று காலை மறைவுற்றார். அவருக்கு வாழ்விணையர் கஸ்தூரி, பிள்ளைகள் சந்திரகாந்தன், ஜெயகாந்தன், செல்வகாந்தன், ராஜகாந்தன், வீரகாந்தன் ஆகியோர் உள்ளனர். கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக கழக தொண்டராக. நிர்வாகியாக செயல்பட்டவர். சிறந்த நாடக ஆசிரியர்.
அவரின் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன், வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், நகர அமைப்பாளர் முருகன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் துரை.ஜெயபால் ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அவரின் உடல் அடக்கம் இன்று நடைபெற்றது. கழக நிர்வாகிகள் சிதம்பரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
No comments:
Post a Comment