வடலூர், செப். 14- வடலூர் நகரில் 15 இடங்களில் கழ கக் கொடியேற்று விழா வடலூர் நகரக் கழக கலந்துரையாடல் கூட்ட தீர்மானம் வடலூர் நகர திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 13 9 2022 அன்று மாலை 6 மணி அளவில் புலவர் ராவணன் இல்லத்தில் நடைபெற்றது கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரைசந்திர சேகரன் 144ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டிய அவசியத்தை விளக்கினார்.
வடலூர் நகர செயலா ளர் குணசேகரன் வர வேற்புரையாற்றினார் நகரத் தலைவர் புலவர் ராவணன், ஒன்றிய அமைப் பாளர் சேகர், ஏ.திருநாவுக் கரசு, தின மோகன் ஆகி யோர் கருத்துரை ஆற்றி னர். இறுதியாக நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள் தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 17.9.2022 அன்று காலை 7 மணி அளவில் தொடங்கி 15 இடங்களில் கழக கொடிகளை உயர்த் துவது என்றும், ஜோதி நகர் ரமா பிரபா இல்லம், கழகப் பொதுச் செயலா ளர் துரை சந்திரசேகரன் இல்லம், வடலூர் குறுக்கு சாலை ஆகிய இடங்களில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தல், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கல், முக்கிய இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்தல் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. விடுதலை சந்தா சேர்க்கை பணியையும் நிறைவு செய்து தர முடி வாற்றப்பட்டது முடிவில் மறுவாய் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
No comments:
Post a Comment