மறைந்த திருவெறும்பூர் நகர கழக தலைவர் ப.சுரேஷ் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

மறைந்த திருவெறும்பூர் நகர கழக தலைவர் ப.சுரேஷ் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்

திருச்சி, செப். 16- திருச்சி திருவெறும்பூர் நகர கழக தலைவராக செயலாற்றி வந்தவர் ப.சுரேஷ். இவர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி 14.9.2022 அன்று மாலை 4.30 மணியளவில்  திருவெறும்பூர், வேங்கூர் நடராஜபுரம், கேலக்ஸி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. 

திராவிடர் கழக தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு படத்தினை திறந்து வைத்து அவரது வாழ்விணையரும், திருச்சி மாவட்ட மகளி ரணி செயலாளருமான சாந்திக்கும் அவர்களது  மகன்கள் அறிவுச்செல் வன், அன்புச்செல்வன் ஆகியோருக்கும் ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மாநில மகளிரணி செய லாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, மாவட்டச் செய லாளர் இரா.மோகன் தாஸ், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரி யப்பன், செயலாளர் தமிழ்சுடர், பெல் ஆறு முகம். காட்டூர் காமராஜ், சங்கிலிமுத்து, ராஜேந் திரன், பாலசுப்ரமணியன், கனகராஜ், இளங்கோ வன், ஸ்டாலின், வழக் குரைஞர் முருகேசன், ராஜசேகரன், மகாமணி, தேவா, ஜெயில்பேட்டை குணசேகரன், விஜய்யோ கானந்த், பொற்செழியன், லோகநாதன், திலீபன், செபஸ்டியான், பாண்டி யராஜ், அறிவுச்சுடர், மின்னல், மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, ரூபியா, கவுரி, கிரேசி, சித்ரா, சங்கீதா, வசந்தி, அமுதா, கல்பாக்கம், ராமச்சந்திரன், வசந்தி ராமச்சந்திரன், சிவானந்தம், நிர்மலா, யாழ்மதி, வி.சி.வில்வம், புலவர் முருகேசன், நட ராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தாஸ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment