நாகர்கோவில், செப். 29- தந்தை பெரியாருடைய பிறந்த நாளில் நாகர்கோவில் ஒழுகினச்சேரியில் உள்ள அவருடைய சிலைக்கு குமரி மாவட்ட கழக சார்பாக மாவட்ட தலைவர் மா. மு. சுப் பிரமணியம் தலைமையிலும் மாவட்ட செயலா ளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட அமைப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவ தாணு, இலக்கிய அணி செயலாளர் பொன்னு ராசன், இளைஞரணி மாவட்ட தலைவர் இரா.இராஜேஷ், விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஜே.ரி. ஜூலியஸ், பகுத்தறிவாளர்கழக செயலர் பெரியார்தாஸ் மகளிரணி மாவட்ட தலைவர் இந்திரா மணி, ஒன்றிய செயலாளர் இராஜீவ் லால், மாநகர துணைத் தலைவர் எச்.செய்க் முகமது, கன்னியாகுமரி யுவான்ஸ், பெரியார் வீரவிளையாட்டுக் கழக அமைப்பாளர் சிவக் குமார் தோழர்கள் செல்லையன், தங்கராசு, பாலகிருஷ்னன், தமிழரசன், தமிழ்மதி பி.கென் னடி, சி.அய்சக் நியூட்டன், முத்துவைரவன், அப்பாஜி, காட்வின், அலெக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இராமபுரம் ஊராட்சி இலட்சுமிபுரம், செண்பகராமன்புதூர், கலிங்கராஜ புரம் ஆகிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியாருடைய சிலைக்கும் மாலை அணி விக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன .
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திராவிடர்கழகம் சார்பாக ஒன்றிய செயலர் குமாரதாஸ், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மகளிரணி அமைப்பாளர் மஞ்சு குமாரதாஸ், குமரி கிளை கழக அமைப்பாளர் யுவான்ஸ் திமுக ஒன்றிய செயலாளர் பாபு, குமரி பேரூராட்சி மன்ற தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் பெரியாருடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், நாகர்கோவில் வட சேரியில் கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஏற்பாட்டில் பெரியாருடைய பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதுபோல குமரி கழக மாவட்டத்தில் தக்கலை, நெய்யூர், மார்த் தாண்டம், சுசீந்திரம் மற்றும் குமரி மாவட்டம் முழுமையாக பெரியாருடைய பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment