அகமதாபாத், செப்.29 குஜராத்தில் நவராத்திரியின்போது டாண்டியா என்ற நடனம் மிகவும் பிரபலமானது. பிரபலங்களோடு மக்களும் விதவிதமான ஆடைகள் அணிந்து திரையிசைப்பாடலுக்கும் மேடைப்பாடகர்களின் பாடலுக்கும் நடனமாடுவார்கள். இதை உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும். இந்த நடனத்தைக் காண்பதற்கு கட்டணம் வசூலிப்பார்கள்.
அகமதாபாத் நகரத்திற்கு அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் டாண்டியா என்ற கோலாட்ட நடன நிகழ்வை வேடிக்கை பார்க்க தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் சென்றனர். அப்போது அங்கு நின்றுகொண்டு இருந்த ஹிந்துத்துவ அமைப் பினர். இருவரையும் இங்கே ஏன் பார்க்கவந்தீர்கள் என்று மிரட்டியுள்ளனர். மேலும் அவர்களை வாகனம் நிறுத்தும் இடத்தில் வைத்து அடித்துள்ளனர். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பிற்கு நின்றுகொண்டு இருந்த காவல்துறையினர் அங்கு வந்து ஹிந்துத்துவ அமைப் பினரிடம் அடிவாங்கிகொண்டு இருந்தவர்களை மீட் டனர். மேலும் அவர்களிடம் இங்கே எல்லாம் நீங்கள் வரக்கூடாது அப்படி வந்து பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பினர். யாரும் இதுதொடர்பாக புகார் அளிக்காததால் தாக்குதல் நடத்திய ஹிந்து அமைப்பினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
No comments:
Post a Comment