திண்டுக்கல், செப். 8- திண்டுக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த ஒன்றிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியது:
நாட்டில் மத, மொழி, ஜாதி வேறுபாடுகளைத்தான் ஒன்றிய ஆட்சியில் உள்ளவர்கள் வளர்க்கின்றனர். இந்த நேரத்தில் மக்களை ஒன்றுபடுத்துவதற்காக ராகுல் நடைப் பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது தவறு.
தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் கிடையாது. குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அதிகரித்தது என்று சொல் வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் எந்தக் கொடி மேலே பறக்கிறதோ இல்லையோ, வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவை கொடிகட்டிப் பறக்கின்றன. பண வீக்கத்தையும் வேலையின்மையையும் எப்படி கட்டுப்படுத் துவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது ஒன்றிய அரசு. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment