தமிழ்நாட்டில் புதிதாக 509 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 509 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை,செப்.22- தமிழ்நாட்டில் நேற்று (செப்21) ஆண்கள் 271, பெண்கள் 238 என மொத்தம் 509 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 108 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 78,317 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 35,117 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று (21.9.2022) மட்டும் 419 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,159 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டில் 20.9.2022 அன்று கரோனா தொற்று பாதிப்பு 496 ஆகவும், சென்னையில் 102 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில்.... 

நேற்று (செப்.21) காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 4,510 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி யுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  


No comments:

Post a Comment