அடி மட்டத்திலே தோன்றினாய் உழைத்தே
மலை உச்சியிலே போய் அமர்ந்தாய் !
தூற்றினார் வாய் வலிக்கப் பின்னர்
போற்றினார் வார்த்தைகள் மீதி இல்லை !
ஏழைகள் மனங் குளிரத் திட்டங்கள்
அனைவரும் படித்திடக் கல்வி மாடங்கள்
உலகமே வியந்திடும் உன் படைப்புகள்
உன்னைப் போல் ஆற்றல் உண்டா ?
தொடாத துறையில்லை அனைத்திலும்
கொள்கைப் படர விட்டாய் புன்னகையில்
"கலைஞர் " சிலையல்ல - பெரும் சிந்தனை !
-சிகாகோ மருத்துவர் சோம.இளங்கோவன்
இயக்குநர், பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா
No comments:
Post a Comment