கருநாடக மாநிலம் பெங்களூரு இரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

கருநாடக மாநிலம் பெங்களூரு இரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

கருநாடக மாநிலம்  -   எல்.ஜி. ஹாவனூர் தலைமையில் அமைக்கப்பட்ட கருநாடக அரசின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பொன் விழா (1972-2022) மாநாட்டில் பங்கேற்க இரயில் மூலம் பெங்களூரு இரயில் நிலையத்திற்கு வந்தடைந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு  கருநாடக மாநில தலைவர் மு. ஜானகிராமன், மாநில செயலாளர் முல்லைக்கோ, மாநில பொருளாளர் ஜெயகிருட்டிணன், கருநாடக மாநில மேனாள் அட்வகேட் ஜெனரல்  ரவிவர்மகுமார், கோலார் தங்கவயல் அறி வழகன், வீ.மு. வேலு, ஆர்.டி. வீரபத்திரன், ஊமை செயராமன், கோலார் தங்கவயல் தோழர்கள் இடஒதுக்கீட்டுப் பதாகை ஏந்தி கொட்டும் மழையில் புத்தகங்கள் வழங் கியும், பயனாடை அணிவித்தும், மலர் கொத்துக் கொடுத்தும்  உற்சாக வரவேற்பு அளித்தனர். (8.8.2022).


No comments:

Post a Comment