அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநராக ஒரு தமிழ் பெண் - கலைச்செல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநராக ஒரு தமிழ் பெண் - கலைச்செல்வி

புதுடில்லி, ஆக.8- அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ் அய்ஆர்) தலைமை இயக்குநராக தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ந.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 4,500 விஞ்ஞானிகள் பணியாற்றும் 38 ஆராய்ச்சி மய்யங்களுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் அறிவியலாளர் ஆவார்.

காரைக்குடியில் உள்ள சிஎஸ்அய்ஆர் - மத்திய எலக்ட்ரோகெமிக்கல் ஆராய்ச்சி மய்யத்தின் இயக்குநராக இருப்பவர் ந.கலைச்செல்வி. லித்தியம் அயர்ன் பேட்டரி துறையில் இவர் பல பங்களிப்புகளை அளித் துள்ளார். சிஎஸ்அய்ஆர் அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்த சேகர் மாண்டே, கடந்த ஏப்ரலில் ஓய்வு பெற்றார். இதையடுத்து தலைமைப் பொறுப்பை பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் ராஜேஷ் கோகலே, கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில், சிஎஸ்அய்ஆர் தலைமை இயக்குநராக ந.கலைச் செல்வி நியமிக்கப்பட் டுள்ளார். இவர் 2 ஆண்டுகள் இந்தப் பதவி யில் இருப்பார் என ஒன்றியப் பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதவிர அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி துறையின் செயலாளர் பொறுப்பையும் இவர் கவனிப்பார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாச முத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்க புரத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இங் குள்ள செயின்ட் ஜோசப் நடுநிலைப் பள்ளி யில் 8ஆம் வகுப்பு வரையும், திருநெல் வேலி காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் படித்துள்ளார்.

சிஎஸ்அய்ஆர் மய்யத்தில் விஞ்ஞானியாக தனது பணியை தொடங்கிய கலைச்செல்வி, எலக்ட்ரோ கெமிக்கல் மின்சார சாதனங்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 6 காப் புரிமைகளும் பெற்றுள்ளார்.

முதலமைச்சர் வாழ்த்து பாராட்டு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்அய்ஆர்-ன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பை தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைச்செல்வி அடைந்திருக்கிறார். அவருக்கு வாழ்த் துகள். தமிழ் வழிக்கல்வி, அறிவியலை கற்றுணரத் தடையாகாது என் பதற்கு கலைச்செல்வியின் இந்த சாதனையே சிறந்த சான்று’ என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment