மருத்துவ அறிவியலுக்கு எதிராக தொடரும் அவதூறு சாமியார் ராம்தேவுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

மருத்துவ அறிவியலுக்கு எதிராக தொடரும் அவதூறு சாமியார் ராம்தேவுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

புதுடில்லி, ஆக.8- நவீன மருத்துவ அறிவியலுக்கு எதிராக பேசிவரும் கார்ப் பரேட் சாமியார் ராம் தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

கார்ப்பரேட் சாமியா ரான ராம்தேவ்,  சில மாதங்களுக்கு முன்பாக நவீன  மருத்துவம் (அலோ பதி) முட்டாள்தனமா னது என்று பேசி, பெரும் சர்ச்சையைக் கிளப்பி னார். இதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. பாபா ராம்தேவ் மீது நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று அறிக்கை வெளியிட்டது.  இந்நிலை யில், கார்ப்பரேட் சாமி யார் ராம்தேவ் மீண்டும் அலோபதி மருத்துவத் தைச் சாடி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். “அமெரிக்க அதிபர் ஜோ  பைடன் ஏற்கெனவே இரு தடுப்பூசி கள் செலுத் தியபின்பும், அவருக்கு  கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதே?” என்று அரித்துவாரில் செய்தி யாளர்கள் ராம்தேவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது, “யோகா, ஆயுர்வேதா வின் துணை யின்றி, எந்தவிதமான தடுப் பூசியாலும், நோய் எதிர்ப் புச் சக்தியை கரோனா தொற்றிற்கு எதிராக நிரந் தரமாக வழங்க முடியாது.  எவ்வளவு பெரிய ஆளாக நீங்கள்  இருந்தாலும், அதிபராக இருந்தால் கூட, மிகப்பெரிய மருத்து வராக இருந்தால்கூட இதுதான் நிலைமை. உலக சுகாதார அமைப் பில் இருக்கும் உயர்ந்த அதிகாரிகள் கூட கரோனா தடுப்பூசி செலுத்திய பின் பும் கூட மீண்டும் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார் கள். இந்த உலகம், மருத் துவ அறிவியலால், தடுப் பூசி என்ற பெயரில் தவ றாக வழிநடத்தப்படுகி றது. இந்த உலகம் யோகா, ஆயுர்வேதாவுக்கு மீண் டும் திரும்பும். மக்கள் துளசியைப் வளர்ப்பார் கள், கற்றாழையை தோட் டத்தில் வளர்ப்பார்கள், தங்கள் உடல்நலத்தைப் பெறுவார்கள்” என்று கூறியுள்ளார். 

சாமியார் ராம்தேவின் பேச்சு குறித்து, ‘ரெசி டெண்ட் டாக்டர்ஸ் பெடரேஷன்' அமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி யுள்ளது. “அலோபதி மருத்துவம் குறித்து ஆதார மற்ற பேச்சுகளை பேசுவது மக்களை அதன் மீதான நம்பிக்கையை இழக்க  வைக்கும்” என்று அதில் தெரிவித்துள்ளது. ‘ரெசிடெண்ட் டாக் டர்ஸ் அசோசியேஷன்' கூட்டமைப்பும், “மீண்டும், அவதூறான, பொறுப்பற்ற முறையில் அலோபதி மருத்துவம், தடுப்பூசி குறித்து ராம்தேவ் பேசியுள்ளார். இதை கனிவுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச் சர் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். இதன்மீது கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய ஆராய்ச்சி, கடின உழைப்பு, நவீன மருத்துவம் ஆகி யவை மீது மரியாதைக் குறைவான போக்கு ஏற் றுக்கொள்ள முடியாதது, பொறுக்க முடியாதது” என தனது சுட்டுரைப் பக் கத்தில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment