தமிழ்நாட்டில் 1,057 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

தமிழ்நாட்டில் 1,057 பேருக்கு கரோனா

சென்னை, ஆக. 8- தமிழ்நாட்டில் புதிதாக 1057 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் நேற்று 29 ஆயிரத்து 066 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 637 பேரும், பெண்கள் 420 பேரும் உள்பட 1,057 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் 234 பேர், கோவையில் 122 பேர், செங்கல்பட்டில் 90 பேர் என அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 68 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதிய வர்கள் 136 பேரும் நேற்று (7.8.2022) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ளது. 1,429 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 38 ஆயிரத்து 33 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

மேலும் நேற்றைய (7.8.2022) நிலவரப்படி 9 ஆயிரத்து 889 பேர் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 436 பேரும், கோவையில் 943 பேரும் செங்கல்பட்டில் 805 பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழ்நாட்டில் 484 பேர் மருத்துவ மனை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 1,429 பேர் கரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 35 லட்சத்து 5 ஆயிரத்து 776 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment