திருநங்கைகளுக்கு சுகாதார காப்பீட்டு அட்டை விரைவில் ஒன்றிய அரசு அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

திருநங்கைகளுக்கு சுகாதார காப்பீட்டு அட்டை விரைவில் ஒன்றிய அரசு அறிமுகம்

புதுடில்லி, ஆக. 26- திருநங்கை களுக்கு நல்வாழ்வு காப் பீட்டு அட்டையை விரை வில் ஒன்றிய அரசு அறி முகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் திருநங் கைகள் தொடர்பான விவகாரங்களுக்காக ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின் றன. திருநங்கைகளை சமூ கத்தின் முக்கிய அங்கமாக கொண்டு வருவதற்காக ஒன்றிய அமைச்சகம் சார் பாக திருநங்கைகள் உரி மைகள் பாதுகாப்பு சட் டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, திருநங்கைகளின் உரி மையை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணை யம் ஒன்று அமைக்கப் பட்டது.

இந்நிலையில் திருநங் கைகளுக்கு நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிய நல் வாழ்வுத் துறை அமைச் சகம் சார்பில் கையெழுத் தாகியுள்ளது. ஒன்றிய சமூகநீதி மற்றும் அதி காரமளித்தல் துறையும், தேசிய நல்வாழ்வு ஆணை யமும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு, பயனாளி திருநங்கையாக இருக்க வேண்டும். அதே போல் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட திரு நங்கை சான்றிதழை வைத்திருக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் இந்த சுகாதார காப்பீட் டுத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ஆயுஷ்மான் பாரத் டிஜி சுகாதாரக் காப்பீடு அட்டை என்று அழைக் கப்படும்.இந்த திட்டத் தின் கீழ், ஒவ்வொரு திரு நங்கைக்கும் மருத்துவக் காப்பீடு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலம் நிதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை வைத் துக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட மருத்துவ மனைகளில் திருநங்கை கள் இலவச சிகிச்சை பெற முடியும்.

வருமான உச்சவரம்பு இல்லை

இந்தத் திட்டத்தின் கீழ் திருநங்கைகள் பயன் பெற வருமான உச்ச வரம்பு எதுவும் கிடை யாது. அவர்களது பொரு ளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் அவர் களுக்கு ஆயுஷ்மான் பாரத் டிஜி சுகாதாரக் காப்பீடு அட்டை வழங் கப்படும். அவர்களது திரு நங்கைகள் அடையாள அட்டையையும், அவர்க ளுக்கு வழங்கப்பட்ட சான்றிதழின் வரிசை எண்ணையும் தேசிய திரு நங்கைகள் இணையதளத் தில் ஒன்றிய அரசு பதி வேற்றம் செய்துள்ளது.

நல்வாழ்வுக் காப்பீடு அட்டை கோரி விண்ணப் பிக்கும் திருநங்கைகளுக்கு அவர்களது சான்றிதழ் எண்ணையும், அடை யாள அட்டையையும் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக ஊழியர்கள் சரிபார்ப்பர். சரிபார்ப்புப் பணிகள் முடிந்த பின்னர் அவர்களுக்கு நல்வாழ்வுக் காப்பீடு அட்டை வழங் கப்படும். அவர்கள் தங் களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சையை இதன்மூலம் பெற முடி யும். இந்த அட்டையைப் பெறுவதற்கு எந்தவித மான கட்டணமும் வசூ லிக்கப்படாது என்றும் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள தகவ லின்படி நாட்டில் 10,639 பேருக்கு திருநங்கைகள் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 8,080 பேருக்கு திருநங்கைகள் பிரத்யேக அடையாள எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், திருநங் கைகள் சான்றிதழ் கேட்டு 2,314 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது ஒன்றிய சமூக நீதி மற்றும் அதி காரமளித்தல் அமைச்ச கத்தின் பரிசீலனையில் உள்ளது.

No comments:

Post a Comment