இதுதான் பக்தி! உறியடி நிகழ்ச்சியில் தவறி விழுந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

இதுதான் பக்தி! உறியடி நிகழ்ச்சியில் தவறி விழுந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

மும்பை, ஆக.26- கிருஷ்ண ஜெயந்தி கொண் டாட்டத்தின் ஒரு பகுதி யாக உறியடி நிகழ்ச்சி நடத்துவது நாட்டில் வழக்கமாக உள்ளது. மகாராட்டிராவில் ‘தகி ஹண்டி’ என்ற பெயரில் உறியடி விழா கொண்டா டப்படுகிறது. அதிக உய ரத்தில் உறியில் கட்டப் பட்டுள்ள பானையை உடைப்பதற்காக இளை ஞர்கள் மனித கோபுரம் அமைத்து மேலே செல் வார்கள். இந்நிலையில் மும்பையில் நடந்த உறியடி விழா ஒன்றில் சந்தேஷ் தல்வி (வயது 24) என்ற இளைஞர் மனித கோபுரத்தில் இருந்து தவறி விழுந்தார். ‘சிவ சம்போ கோவிந்த பதக்’ என்ற குழுவை சேர்ந்த சந்தேஷ் தல்விக்கு இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை  மும் பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் அனு மதித்தனர். பிறகு உயர் சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சந்தேஷ் தல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்க ளுக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.


No comments:

Post a Comment