ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பசுவை கடத்தியவர்கள் அய்ந்து பேரை கொன்றோம் என திமிராக பேசிய ராஜஸ்தான் பாஜக மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கியான்தேவ் அஹூஜா மீது வழக்கு பதிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மோடி அரசிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27இல் இருந்து வெறும் 12 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, மேலும் தனியார் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

றீ நலிந்த பிரிவினருக்கு நலத்திட்டங்கள் உதவு கின்றன. அவற்றை  இலவசங்கள் என்று கூற முடியாது என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment