புதுடில்லி,ஆக.29- வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யும் தொழில் அதிபர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு என்ன வெல்லாம் செய்வார்கள்? நிலம் வாங்குவார்கள், வெளிநாட்டில் முதலீடு செய்வார்கள், சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் இல்லை, இவை மட்டுமில்லை. அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு கலைப்பொருள்களையும் வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதைக் காட்டு கிறது சமீபத்திய சிபிஅய் சோத னைகள்.
கடந்த ஜூலை மாதத்தில் சிபிஅய் திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பண மோசடி வழக்குத் தொடர்பாக, மும்பையில் சில இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ.40 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஓவியங்கள் கிடைத் துள்ளன.
டிஎச்எஃப்எல் என்று சுருக்க மாக அழைக்கப்படும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஆகும். அதாவது வங்கிகளிட மிருந்து கடன் பெற்று, அதை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கட னாக வழங்கும். டிஎச்எஃப்எல் ரூ.31,000 கோடிக்கு மேல் முறை கேடாக கடன் வழங்கியுள்ளதாக 2019-ம் ஆண்டு ‘கோஃப்ரா போஸ்ட்’ வெளிட்ட செய்திபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி வெளியானதை அடுத்து டிஎச்எஃப்எல் நிறுவனம் விசா ரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.
டிஎச்எஃப்எல் நிறுவனத்தின் இயக்குநர்களான கபில் வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வான் இருவரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதாக கூறி பல்வேறு வங்கிகளிடமிருந்து ரூ.34ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் இந்தத் தொகையை முறையாக பயன் படுத்தவில்லை. பல போலி நிறு வனங்களுக்கு கடனாக அளித் துள்ளனர். இந்த வழக்குத் தொடர் பான விசாரணை இன்னும் நீடித்து வருகிறது.
கடந்த ஜூலை மாதத்தில், மும்பையில் இவ்வழக்கில் சம் பந்தப்பட்டவர்களின் இடங்களில் சிபிஅய் சோதனை மேற்கொண் டது. அப்போது சில ஓவியங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.40 கோடிக்குமேல் என்று தெரியவந்தது. வங்கியில் மோசடி பணத்தைக் கொண்டு தான் இந்த ஓவியங்களைகபில் வாத்வானும் தீரஜ் வாத்வானும் வாங்கியுள்ளனர்.
பண மோசடியில் ஈடுபடும் தொழில் அதிபர்கள், அந்தப் பணத்தைக் கொண்டு நிலத்தில் மட்டும், முதலீடு மற்றும் செய் வதில்லை, கலைப்பொருட்கள் வாங்குவதையும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
நீரவ், மெகுல் சோக்சி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பியோடிய நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரிடமிருந்து பல கோடி விலைமதிப்புள்ள கலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. நீரவ் மோடியிடமிருந்து மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் மதிப்பிலான 173 கலைப்பொருட்கள் கைப்பற்றப் பட்டன.
No comments:
Post a Comment