நரிக்குறவர் - இருளர் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

நரிக்குறவர் - இருளர் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகள்!

செங்கல்பட்டு,ஆக.20- மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் அரசின் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது செய்திக்குறிப்பு வருமாறு:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்ல புரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்து ஊடகங்களில் வந்த செய்திகளின் தொடர்பாக சரி யான தகவல்கள் இதன்மூலம் தெரிவிக் கப்படுகிறது. இதுவரை 1.5 கோடி ரூபாய் செலவில் நலத்திட்டங்கள் பூஞ்சேரி கிராமத்தில் செயல்படுத்தப்பட் டுள்ளன.

இதுவரையில் 54 இலவச வீட்டு மனை பட்டாக்கள், 35 ஜாதி சான்றி தழ்கள், ஆறு முதியோர் உதவித்தொகை, வாக்காளர் அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகள் வழங்கப்பட் டுள்ளன.

வங்கிகள் மூலம் கடனுதவி தேவைப் பட்ட 12 நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதமும், திருமதி அஸ்வினிசேகருக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வங்கி கடன் ஆணைகள் தயார் நிலையில் உள்ளன.

ஆனால் திருமதி அஸ்வினி சேகர் என்பவர் ரூபாய் 5 லட்சம் கடன் உதவி கோரியதன்பேரில் கடன் வழங்க அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தயார் நிலையில் இருந்தும், தன்னுடைய ரூ.5 லட்சத்திற் கான கடன் வழங்கும் ஆணையையும் சேர்த்து அனைத்து நபர்களுக்கும் ஒன்றாக வழங்கும்பட்சத்தில் தான் பெற்றுக்கொள்வதாக தெரிவித்து வங்கி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர நபர்களுக்கும் ஆணைகள் வழங்கப்படுவது நிலுவையில் உள்ளன.

திருமதி. அஸ்வினி சேகர் என்பவர் மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் சொந்தமாக கடைவைத்து நடத்திட இடஒதுக்கீடு கோரியதன் பேரில் ஜூலை மாதத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம்மூலம் தகுந்த கடைகள் வழங்க உத்தரவிட்டதன்பேரில் கடற்கரை பகுதி, அய்ந்து ரதம் பகுதி, ஒத்தவடத்தெரு போன்ற இடங்களில் கடை வழங்க ஏதுவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் திருமதி அஸ்வினி சேகர் என்பவர் கூறியவாறு கடை இருப்பிடம் அமைய வில்லை. அவர் குறிப்பிட்டுக் கேட்கும் கடையானது ஏற்கெனவே ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  17.8.2022 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து கோரியதன் அடிப்படையில் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமம் மூலம் உடனடியாக கடை ஒதுக்க ஆணையிடப்பட்டு நேற்றுமுன்தினம்  (18.08.2022) காலை கடை எண் 66 ஒதுக் கீடு செய்ய இருந்த நிலையில் அதனையும் அவர் நிராகரித்து விட்டார்.

மேலும் புதிதாக வழங்கப்பட்ட இடங்களில் பிரதமர் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 22 நபர்களுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கான ஆணை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பிறப் பிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி யில் வசித்து வரும் 55 குடும்பங்களுக்கு கழிப்பறைக் கட்டடம் கட்டிக்கொள்ள பேரூராட்சிகள் ஆணையர் மூலம் 27.07.2022 அன்று நிர்வாகம் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந் நிலையில் ஒரு ஒப்பந்ததாரர் மூலம் வீடுகள் கட்டப்படுவதை ஒருங்கிணைப் பதற்கான முயற்சிகளுக்கும் அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு பெறுவதற்கும் துறை அலுவலர்கள் தொடர் நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்ட பூஞ்சேரி கிராமத்தின் இருளர் மற்றும் நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.1.5 கோடி மதிப்பில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந் நிலை யில் அவர்களுக்கு வழங்க தயாராக உள்ள நலத்திட்ட உதவிகளை செயல் படுத்துவதற்கு அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பை பெற செங்கல்பட்டு சார்ஆட்சியர் நேரிடையாக சென்று விவரங்களை எடுத்துக்கூறி உதவிகளை வழங்குதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ரா ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment