தமிழ்நாட்டில் புதிதாக 639 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 639 பேருக்கு கரோனா

சென்னை, ஆக.20 தமிழ்நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:- தமிழ்நாட்டில் புதிதாக 639 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை யில் 98 பேர், கோவையில் 87 பேர், செங்கல்பட்டில் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 402 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில்  2-ஆவது வாரமாக உயிரிழப்பு இல்லை. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளாகி 6 ஆயிரத்து 229 பேர் சிகிச்சை யில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயி ரத்து 479 பேரும், கோவையில் 633 பேரும், செங்கல்பட்டில் 371 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment