தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்து சு.சாமி வழக்கு: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்து சு.சாமி வழக்கு: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி, ஆக.29 தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்ச கராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித் துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், "தற்போது தமிழ் நாட்டில் ஆளும் திமுக அரசு அறி வித்துள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டுக் கோயில்களில் அர்ச் சகர் நியமனங்களை மேற்கொண்டு வரு கிறது.

தமிழ்நாடு அரசு கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்க அனுமதிக்கக் கூடாது. கோயில் நிர்வாகம்தான் அர்ச்சகர் நியமனம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.மேலும், கோயில் சொத்துகளின் உரிமை யாளராக அரசு இருக்கக் கூடாது. சமயம் சார்ந்த செயல்படுகளில் அரசு தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரி யிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வில் இன்று (29.8.2022) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே மனுக்கள் நிலுவையில் உள்ளன. அப்படியிருக்கும்போது, தற்போது என்ன நிவாரணம் கோருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். 

அப்போது, மனுதாரர் தரப்பில், "அர்ச்சகர் நியமனம் தொடர்பாக எந்த மனுவும் நிலுவையில் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டது. 

அப்போது நீதிபதிகள், "கோயில் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப் படைக்க வேண்டும் என்ற வழக்கு தான் நிலுவையில் உள்ளது" என்று தெரிவித்தனர். 

அப்போது வாதிட்ட சுப்பிர மணி யன் சுவாமி, "தற்போது தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண் டும். அர்ச்சகர்கள் நியமனம், நிர் வாகம் ஆகியவற்றை கோயில் நிர் வாகமே மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், "தற் போதைய நிலையில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக் கும் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறி, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க தாக்கீது பிறப்பித்து உத்தரவிட்டனர். 

அப்போது, மனுதாரர் சுப்பிர மணியன் சுவாமி, "இந்த வழக்கில் முடிவு வரும் வரை அர்ச்சகர் நிய மனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழ்நாடு, குஜ ராத், கருநாடகம் உள்ளிட்ட மாநிலங் களில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை தனியாரிடம் ஒப் படைக்க வேண்டும் என தயானந்த சரஸ்வதி உள்ளிட்ட பலர் தொடர்ந்த வழக்குகளுடன் இணைத்து, தமிழ் நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கும் விசாரிக்கப்படும் எனக்கூறி விசாரணையை செப் டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment