படம் 1: சமூகநீதிபற்றிய உணர்வுகள் பசுமையான தாவரம்போல செழித்து வளர்ந்திடவேண்டும் என்பதனை அடையாளப்படுத்தி, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா அவர்களும் தொட்டிச் செடிக்கு நீர் ஊற்றினர். உடன் சமூகநீதிக்குப் பாடுபட்டு வரும் செயல்பாட்டாளர்கள் உள்ளனர். படம் 2: கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்த எல்.ஜி.ஹாவனுர் படத்திற்கு மலர்மாலையும், அந்நாள் (1975 இல்) மாநில அரசிடம் அளிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அறிக்கைக்கு மலர் சூட்டியும் போற்றி மரியாதை செலுத்திடும் மேனாள் முதலமைச்சர் சித்தராமையா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் ரவிவர்ம குமார், மேனாள் மாநில அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா மற்றும் பலர்.
Tuesday, August 9, 2022
எல்.ஜி.ஹாவனுர் உருவப் படத்திற்கு சமூகநீதித் தலைவர்கள் மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment