டிரோன்களை அழிக்கும் விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றி! - டிஆர்டிஓ தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

டிரோன்களை அழிக்கும் விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றி! - டிஆர்டிஓ தகவல்

டெகராடூன், ஆக. 25- டிரோன்களை அழிக்கும் விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றிகர மாக நடைபெற்றது என டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது. இந்த ஏவு கணை சோதனை  ஒடிசா கடற் கரையில்  கப்ப லில் இருந்து ஏவப் பட்டது என தெரிவித்து உள்ளது.

வேகமாக நகரக்கூடிய ஆளில்லா விமானங்கள் போன்ற குறுகிய தொலைவு இலக்குகளை செங்குத்தாக ஏவப்பட்டு துல்லிய மாக தாக்கி அழிக்கும் புதிய ஏவு கணையை டிஆர்டிஓ தயாரித்துள் ளது.  இந்த ஏவுகணையானது நேற்று முன்தினம் ஒடிசாவின் சண்டிப்பூர் கடல்பகுதியிலிருந்து இந்திய கடற் படை கப்பல் மூலம்  ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையில், ஏவுகணை குறிப்பிட்ட  இலக்கை துல்லியமாக தாக்கி ஏவுகணை அழித்தது. ஏவுகணையின் செங்குத்து ஏவுதல் திறனை நிரூபிப்பதற்காக அதிவேக ஆளில்லா வான்வழி இலக்குக்கு எதிராக இந்த ஏவுகணை இந்திய கடற்படைக் கப்பலில் இருந்து  நடத் தப்பட்டது. இந்த ஏவுகணையின் அனைத்து பாகங்களும் உள்நாட் டில் தயாரிக்கப்பட்டவை என்றும், உள்நாட்டு ரேடியோ அதிர்வெண் தேடு கருவி பொருத்தப்பட்ட ஏவு கணை என்றும்  ராணுவ மேம் பாட்டு ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. செங்குத்து ஏவுதல் குறுகிய தூர மேற்பரப்பு-விமான ஏவுகணை (க்ஷிலி-ஷிஸிஷிகிவி) அமைப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (ஞிஸிஞிளி) உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டுள்ளது அதன் டிவிட்டர் பக் கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment