சமூகநீதிபற்றிய பொன்விழா மாநாட்டில், சமூகநீதிக் கொள்கையில் ஆழ்ந்த பற்றுக்கொண்ட 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (ஆகஸ்டு 3) கண்ட கருநாடக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மேனாள் முதல மைச்சர் சித்தராமையா அவர்களை தமிழர் தலைவர் வாழ்த்தினார் - பாராட்டுதலைத் தெரிவித்தார்.
சமூகநீதிப் பயணத்தில் சிறப்புக் குரிய தடங்களைப் பதித்துவரும் கரு நாடகத்தில், சித்தராமையா போன்ற வர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து, கொள்கைகளை நடைமுறைகளாக்கிட வேண்டும். கருநாடகத்திற்கு மட்டு மல்ல, நாட்டிற்கே சமூகநீதிப் பயணத் தில் வழிநடத்திட வேண்டும் எனக் கூறி, அனைவரது கரவொலிக்கிடையே பயனாடை அணிவித்து, தமிழர் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment