இந்தியாவில் 5,439 பேர் கரோனாவால் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

இந்தியாவில் 5,439 பேர் கரோனாவால் பாதிப்பு

இதனால், நாட்டில் இதுவரை கரோனா வால் பாதிக்கபட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 162 ஆக அதிகரித் துள்ளது. 

கரோனாவில் இருந்து குண மடைந்தோர் மொத்த எண் ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 24 ஆக அதிகரித் துள்ளது. 

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 65 ஆயிரத்து 732 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே வேளை நாடு முழுவதும் இதுவரை 212.71 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப் பட்டுள்ளதாக ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் நாட்டில்  

தமிழ்நாட்டில் இன்று புதி தாக 494 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது. சென்னையில் 75, செங் கல்பட்டில் 33, திருவள்ளூரில் 15 மற்றும் காஞ்சிபுரத்தில் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது கோவை 64, திருநெல்வேலி 9, தூத்துக்குடி 5, சேலம் 33, கன்னி யாகுமரி 22, திருச்சி 12, விழுப்புரம் 7, ஈரோடு 31, ராணிப்பேட்டை 10, தென்காசி 2, மதுரை 5, திருவண்ணாமலை 8, விருதுநகர் 8, கடலூர் 10, தஞ்சாவூர் 5, திருப்பூர் 21, திண்டுக்கல் 8, தேனி 4, சிவகங்கை 4, புதுக்கோட்டை 4, கிருஷ்ணகிரி 24, திருவாரூர் 3, பெரம்பலூர் 0, நாமக்கல் 14, கள்ளக்குறிச்சி 1, வேலூர் 7, தருமபுரி 4, ராமநாதபுரம் 1, மயிலாடுதுறை 9, நீலகிரி 5, நாகப்பட்டினம் 3,கரூர் 2, அரியலூர் 2, திருப்பத்தூர் 6 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த ஒருவருக்கு கரோனா உறுதியானது.இன்று மொத்தம் 19,296 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 294 ஆண்கள் 200 பெண்கள் என மொத்தம் 494 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 537 பேர் இன்று குணமடைந்த நிலையில் 5,161 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.


No comments:

Post a Comment