நிலக்கோட்டை, ஜூலை 6- அரியலூ ரில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம் ஜூலை 2 அன்று, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் நடைபெற்றது. திண்டுக் கல் மாவட்டத்தில் நடை பெறும் மாநாடு விளக்க இரண்டாவது தெரு முனைக் கூட்டம் என்ப தும் குறிப்பிடத்தக்கது. (இதற்கு முன் ஜூன் 26ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்றது)
இந்த கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. சக்தி சர வணன் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சிக்கு திண்டுக் கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன், மண்டல தலைவர் மு.நாகராசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா.கமல் குமார், மாவட்ட இளைஞரணி செயலா ளர் ஜி.எச். பாண்டி, தி.தொ.க. பேரவை துணை தலைவர் செல்வம், நகர செயலாளர் ஆர்.கே.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் இரா.ஜெயப்பிரகாஷ் வர வேற்புரை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண் டியன், மாவட்ட செயலா ளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன், மண்டல தலைவர் மு.நாக ராசன், தி.தொ.க. பேரவை துணை தலைவர்செல் வம், சீரிய பகுத்தறிவாள ரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான வழக்கு ரைஞர் மு. அன்பழகன், வத்தலக்குண்டு முத்து, ஆட்டோ சுந்தர் ஆகி யோரின் உரையைத் தொடர்ந்து, கழக பேச்சா ளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற் றினார். நகர தலைவர் பழ.நாகராஜ் நன்றியுரை வழங்கினார்.
நிலக்கோட்டை ஒன் றியத்திற்கான விடுதலை சந்தா புத்தகங்களை, மாவட்ட செயலாளர் மு. ஆனந்த முனிராசன், மாவட்ட இளைஞரணி தலைவர் சக்தி சரவணனி டம் வழங்கினார்.
மேலும் இந்தக் கூட் டத்தில் முனியாண்டி, காஞ்சித்துரை மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சீரிய பகுத்தறிவாளரும், திமுக பொதுக்குழு உறுப்பினரு மான வழக்குரைஞர் மு. அன்பழகன், 25 விடுதலை அரையாண்டு சந்தா தொகை 25,000 ரூபாயை மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியனிடம் கொடுத்து இந்நிகழ்ச் சிக்கு சிறப்பு சேர்த்தார், உடன் திமுக நகர செயலா ளர் ஜோசப், வடக்கு ஒன்றிய செயலாளர் வழக் குரைஞர். சவுந்தரபாண்டி யன், கதிரேசன் ஆகியோர் இருந்தனர்.
No comments:
Post a Comment