கன்னியாகுமரி, ஜூலை 6- கழக இளைஞரணி மாநில மாநாட்டில் அதிக இளைஞர் கள் பங்கேற்கவும், விடு தலை இதழுக்கு அதிக அளவிலான சந்தாக் களை திரட்டி வழங்குவது எனவும் கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத் தில் முடிவு செய்யப்பட் டது.
கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட் டம் நாகர்கோவில் ஒழு கினசேரி பெரியார் மய் யத்தில் வைத்து மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ். அலெக்சாண்டர் தலைமையில் நடை பெற் றது. மாவட்ட அமைப் பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலை வர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குமரிமாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் ஆகியோர் சிறப்புரை ஆற் றினர். மாநகர துணைத் தலைவர் ஹ.செய்க் முக மது கடவுள் மறுப்பு கூறி னார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலா ளர் பெரியார்தாஸ், திரா விட மாணவர் கழக பொறுப்பாளர் கோகுல், தோழர்கள் ராஜேஷ், யுவான்ஸ், சியாமளா, சதீஷ் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
விடுதலை இதழுக்கு அதிக சந்தாக்களை திரட் டுவது, அரியலூரில் நடை பெற உள்ள திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் தோழர்கள் பெருந்திரளாக வாகனம் மூலம் சென்று பங்கேற் பது, மாநாட்டிற்கு நன் கொடை வழங்குவது, மதுரையில் நடைபெற்ற கழக மாநில பொதுக்குழு தீர்மானங்களை செயல் படுத்துவது, குமரி மாவட்ட இளைஞரணி மாணவர் கழகத்தை பலப்படுத்தும் நோக்கில் தெரு முனைக்கூட்டங் கள், சுவர்விளம்பரங்கள், துண்டறிக்கைகளை பரப்புதல், இணைய தளங்கள் மூலம் கருத்துக் களை பரப்புதல், பெரியார் _அம்பேத்கர் படங்களை திரையிடுதல் போன்ற பரப்புரைகளை செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்டன.
No comments:
Post a Comment