Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பரமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த சம்பாஷணை
July 15, 2022 • Viduthalai

04.10.1925- குடிஅரசிலிருந்து

பார்வதி : - பிராணனாதா!

பரமசிவன் : - என்ன பிராணனாயகி

பார்வதி : - சில முனிசிபாலிட்டிகளில் சேர்மெனும், வைசேர்மெனும் சண்டைபிடித்துக் கொள்ளுகிறார்களே அது எதற்காக?

பரமசிவன் : என் கண்ணே! இது உனக்குத் தெரியாதா? திருடர்கள் இரண்டுபேர் தங்களுக்குள்ளாகவே சண்டைப் போட்டுக் கொண்டால் அது எதற்காக?

பார்வதி : நாதா! இது எனக்குத் தெரியாதா? திருட்டு சொத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்வதில் வித்தியாசம் ஏற்பட்டால் இருவரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டியது தான். முனிசிபாலிட்டிகளில் எப்படி சண்டை வரும்?

பரமசிவன் ;- அதே மாதிரிதான் முனிசிபாலிட்டியிலும் பொது ஜனங்களிடம் இருந்து வாங்கும் லஞ்சத்திலும் உத்தியோகம் கொடுப்பதற்கு ஆக வாங்கும் தரகிலும் கண்டிராக்டர்களிடமிருந்து வாங்கும் வீதாச்சாரத் திலும் இருவரும் பிரித்துக் கொள்வதில் வித்தியாசம் ஏற்பட்டால் சண்டை வரவேண்டியது தானே?

பார்வதி ;- இதெல்லாம் சேர்மெனுக்கும் முனிசிபல் சிப்பந்திகளுக்கும் தானே சேரவேண்டியது. வைசேர்மெனுக்கு இதிலென்ன பாத்தியமிருக் கிறது? பரமசிவன் ;- என்ன திரேயுதாயுகத்து சங்கதி பேசுகிறாய்? அந்த மாதிரி இருவருக் குள்ளும் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால்? அல்லாமலும் அதெல்லாம் பழைய காலம்.

திரேதாயுகத்தில் சிப்பந்திகள் மாத்திரம் தான் மேற்படி ஆதாயங்களை அனுபவித்து வந்தார்கள்.

திரேதாயுகத்தில் சிப்பந்திகளும் சேர்மெனு மாய் சாப்பிட்டு வந்தார்கள்.

துவரபாயுகத்திலேயே சிப்பந்திகளும் சேர்மெனும் வைசேர்மெனும் சாப்பிட வேண் டியது.

இந்தக் கலியுகத்திலோ சிப்பந்தி, சேர்மென் வைசேர்மென் கவுன் சிலர்கள் ஆக நான்கு  பேர்களும் சாப்பிட வேண்டியது. எப்படி மனுதர்ம சாஸ்திரத்தில் இருந்தபோதிலும் இன்னும் இது பூராவும் அமுலுக்கு வரவில்லை.

பார்வதி : - அப்படியானால் எனது கேள்விகளுக்கு பொறுமையோடு பதில் சொல்ல வேண்டும். முதலில் இருந்து வருகிறேன். முனிசிபல்சிப்பந்திகள் லஞ்சமும் தரகும் மாமூலும் வாங்க காரணம் என்ன? அதுயாருடைய குற்றம்?

பரமசிவன் :- சர்க்கார் வழக்கமும் சேர்மெனு டைய குற்றமும் தான் காரணம்.

பார்வதி :- சேர்மெனும் வைசேர்மெனும் லஞ்சமும் தரகும் மாமூலும் வாங்கவும் பங்கு பிரித்துக் கொள்வதில் சண்டைபோட்டுக் கொள்ளவும் யார் காரணம்?

பரமசிவன் ;- அப்படிப்பட்ட சேர்மெனையும் வை சேர்மெனையும் நியமித்த கவுன்சிலர்கள் தான் பொறுப்பாளிகளாவார்கள்.

பார்வதி : - இப்படிப்பட்ட சேர்மென் வை சேர்மென்களை நியமித்த கவுன்சிலர்களின் நடவடிக்கைக்கு யார் பொறுப்பாளி?

பரமசிவன் ;- இவர்களுக்கு ஓட்டு செய்த ஓட்டர்கள்தான் பொறுப்பாளி களாவார்கள்.

பார்வதி :- இம்மாதிரி கவுன்சிலர்களுக்கு ஓட்டு செய்த ஓட்டர்களின் நடவடிக்கைக்கு யார் பொறுப்பாளி?

பரமசிவன் :- அனேகமாய் இந்த காரியத்திற்கு ரூபாய்கள் தான் பொறுப்பாளி என்று சொல்ல வேண்டும்.

பார்வதி :- கேவலம் ரூபாய்க்கு இவ்வளவு பெரிய யோக்கியதை ஏற்பட்டு போய்விட்டது என்கிறீர்களே, ரூபாய்கள் இப்படிச்செய்யுமானால் இதற்கு யார் பொறுப்பாளி?

பரமசிவன் : ரூபாய்க்கு நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் ஏற்பட மனிதர்களின் ஒழுக்கக் குறைவும் வயிற்றுக் கொடுமையும்தான் பொறுப்பாளி.

பார்வதி :- ஒரு நாட்டில் இம்மாதிரி ஒழுக்கக் குறைவும், வயிற்றுக் கொடுமையும் ஏற்பட யார் பொறுப்பாளி?

பரமசிவன் : சர்க்கார் தான் பொறுப்பாளி.

பார்வதி : இம்மாதிரி சர்க்கார் ஏற்பட யார் ஜவாப்தாரி?

பரமசிவன் : ஜனங்களின் ஒற்றுமைக் குறைவுதான்.

பார்வதி ;- ஜனங்களின் ஒற்றுமைக்குறைவிற்கு யார் பொறுப்பாளி?

பரமசிவன் :- அவர்களுக்குள்ளிருக்கும் ஜாதி வித்தியாசமும் உயர்வு தாழ்வு என்று சொல்லிக் கொள்வதும் மக்களை ஒன்று சேர்வதற்கில்லாமல் செய்து கொண்டு வருகிறது.

பார்வதி : அப்படியானால் இதற்கு என்ன தான் செய்வது?

பரமசிவன் : செய்வதென்ன இருக்கிறது? நாட்டிற்கு நல்லகாலம் வரும்போது இவை யெல்லாம் தானாக ஓடிப்போகும் அதுவரை நிர்மாண திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
January 23, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn