ஆண்மை என்ற பதமே பெண்மையை இழிவு படுத்துவது. பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் ஒழிய பெண்ணின் விடுதலை இல்லை.
பாவத்திற்குப் பயந்து பதிவிரதையாய் இருப்பவளும், காவலுக்குப் பயந்து கற்பாயிருப்பவளும், மானத்துக்குப் பயந்து பத்தினியாயிருப்பவளும், உதைக்குப் பயந்து பதிவிரதையாருப்பவளும், ஒரே யோக்கியதை உடையவளே.. தொழிலாளி - முதலாளி தன்மை முறையே இருக்கக்கூடாது. வேலை செய்பவர்கள், பங்காளிகளாக அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது அடிமைத் தனம்.
பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதாருக்கு சமத்துவம் கிடைக்குமா? ஒருக்கால் கிடைத்தாலும், ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது.
No comments:
Post a Comment