பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செயல்படுத்துக! அமைச்சர் கே.என்.நேரு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செயல்படுத்துக! அமைச்சர் கே.என்.நேரு

சென்னை, ஜூலை 24 சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நக ராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் கைத்தறி மற்றும். துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் முன்னிலையில்  சேலம் மாவட்டஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர் வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழி காட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகத் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. அந்நிதியினை நேரடியாகவும், உடனடி யாகவும். மாநகராட்சிகள், நக ராட்சிகள் மற்றும் பேரூராட்சி களுக்கு, வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத் திற்கு ரூ.1,000 கோடியும், நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.4 கோடியும், சிறப்பு நிதியாக சென்னை மாநகராட்சிக்கு ரூ.890 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

எந்தெந்தப் பகுதிகளில் எவ்வாறான திட்டங்கள் உடனடி யாகத் தேவை என்பது குறித்து மாநகராட்சி மேயர்கள், நகராட் சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தால், அது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத் துச்சென்று அனுமதி பெற்று விரைவாக திட்டங்களைச் செயல் படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு, பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்குவ தோடு. அனைத்து பகுதி களுக்கும் மழைநீர் வாய்க் கால்கள் மற்றும் கழிவு நீர் ஓடைகள் அமைக்கப்பட்டு, நகர்ப்புறங்களில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை மேம்படுத்தி நிலத்தடி நீரினை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பல் வேறு இடங்களில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட் டங்களை விரைவாகமுடித்திடவும் அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும். குடிசைப்பகுதிகள் உள்ளஇடங்களில்சாலை, தெரு விளக்கு மற்றும் கழிப்பறை வசதி களை முழுமையாக. எங்கெல்லாம் ஏற்படுத்த முடியுமோ அங்கெல் லாம் ஏற்படுத்துவதுதான் அரசின் நோக்கமாகும். அனைத்துப் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கும் வகையில் துறை செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப் படைவசதிகளும் கிடைக்கச் செய்வதை நகராட்சி நிர்வாகத் துறை அலுவலர்கள் உறுதி செய் திட வேண்டும்.

பேரூராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையின் முக் கியத்துவத்திற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குப்பைகள் சேரும் இடத்திலேயே அதனை மக்கும் குப்பைகள் எனில் உரத்திற்காகவும், மக்காத குப்பைகள் எனில் மின் சாரமாக்குவதற்கும் நடவடிக் கைகள் மேற்கொள்ள ஏதுவாக நகராட்சி நிர்வாகத் துறையின் செயலாளர் மற்றும் இயக்குநர் ஆகியோர் இந்தியாவில் இத் திட்டம் சிறப்பாக மேற்கொண் டுள்ள இடங்களை நேரில் பார்வை யிட்டு வந்துள்ளார்கள். அது போன்று நம்முடைய பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.

நம்முடைய பணி என்பது நமது நகரத்தைத் தூய்மையாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மாற்றி, அனைத்துத் தேவை களையும் பொது மக்களுக்கு முழு மையாக வழங்கிட வேண்டுமென சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சார்ந்த மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் மற்றும் பேரூராட்சித் தலைவர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு நகராட்சி நிர்வாகத் துறைஅமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.


No comments:

Post a Comment