தா.பழூரில் கடைவீதிப் பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

தா.பழூரில் கடைவீதிப் பிரச்சாரம்

தாபழூர், ஜூலை 11- அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெற்ற  மாநில கழக இளைஞரணி மாநாட் டிற்காக துண்டறிக்கைப் பிரச்சாரம் மற்றும் கடை வீதிகளில் நன்கொடை திரட்டும் பணிகள் 6.7.2022 அன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட தலைவர் விடு தலை. நீலமேகன் தலை மையில் மாவட்ட செய லாளர் க. சிந்தனைச்செல் வன், மண்டல தலைவர் இரா.கோவிந்தராஜன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன்,   மாவட்ட அமைப்பாளர், மாவட்ட துணைச்செயலாளர் மா.சங்கர், மாவட்ட தொழி லாளரணி தலைவர் சி.சிவக்கொழுந்து, செந் துறை ஒன்றியத் தலைவர் மு.முத்தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா. செல்வக்குமார், தா.பழூர் ஒன்றிய தலைவர் இரா.இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி.வெங்கடா சலம், மாவட்ட ஆசிரியர ணித்தலைவர் இரா.இரா சேந்திரன்,உல்லியக் குடி சிற்றரசு ,அரியலூர் ஒன் றிய செயலாளர் மு. கோபா லகிருட்டிணன், ஆண்டி மடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன் உள் ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்று மாநாட்டு துண்டறிக்கைகளை கடைவீதியில் கொடுத்து வீதிவீதியாக பிரச்சாரம் மேற்கொண்டனர் பொது மக்களும் நன் கொடை தந்து ஆதரவு கொடுத்தனர்.


No comments:

Post a Comment