கரோனா குறித்த அச்சம் மக்களிடையே ஓரளவு விலகிவிட்டாலும் கரோனா விலகிவிட்டது என்று சொல்வதற்கில்லை. சமீபத்தில்கூட பில்கேட்ஸ் கரோனாவின் புதிய அலை குறித்த எச்சரிக்கை ஒன்று தெரிவித்திருந்தார். அதனை உலக சுகாதார நிறுவனமும் வாய்ப்பிருக்கலாம் என்பதைப் போல் உறுதி செய்திருக்கிறது. கொரோனா இயற்கையா செயற்கையா உயிரியல் போரா என்ற பட்டிமன்றங்கள் எல்லாம் அப்புறம்தான்.
முதலில் ரீரோனா தடுப்பூசியை நாம் போட்டுக்கொள்ள வேண்டியதுதான் நம்மையும் நம் சமூகத்தையும் காப்பதற்கான ஒரே நல்ல வழி. இன்று, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி மிக வேகமாக போடப்பட்டு வருகிறது. பலரும் தாமாகவே முன்வந்து ஆர்வத்துடன் போட்டுக்கொண்டாலும் இன்னும் பல்லாயிரக்கணக்கான இளையோரிடமும் பெற்றோரிடமும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து அச்சமும் குழப்பமான கேள்விகளும் நிறைய உள்ளன.
கோவிட் 19 காரணமாக ஏற்பட்ட ஒட்டுமொத்த நோய்த்தொற்று குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் போன்று புதிய உருமாற்றம் கொண்ட வைரஸ்கள் பரவலாம் என்ற அச்சமும் உள்ளது. இதுவே, இந்தியாவில் நான்காம் அலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால், கோவிட் தடுப்பூசி திட்டத்தை குழந்தைகளிடமும் முழுமையாக எடுத்து செல்ல மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகின்றன.
குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி குறித்து சில அடிப்படைத் தகவல்களைச் சொல்கிறார் தொற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார்.
குழந்தைகளுக்கு ஏன் தடுப்பூசி போட வேண்டும்?
பெரும்பாலான குழந்தைகளிடத்தில் கோவிட்19 நோய்த்தொற்று பரவல் விகிதம் குறைவாகவே உள்ளது. இருப்பினும் பதின்ம வயதினர், இணை நோய்கள் உள்ள குழந்தைகளிடத்தில் இதன் தீவிரத்தன்மை அதிகமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் (MIS-C) எனப்படும் தொற்றுக்குப் பிந்தைய நோய்க்குறி இதயத்தைப் பாதித்து, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கும், தீவிர சிகிச்சையில் சேர்க்கப்படுவதற்கும் வழிவகுக்கிறது. இதனால் நோயின் தன்மை அதிகரிக்கிறது. எனவே, உங்கள் குழந்தைக்கு கடுமையான நோய் வராமல் தடுக்கவும், MIS-C போன்ற சிக்கல்களைத் தவிர்க்கவும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம்.
இத்துடன் கோவிட்19 தொற்றானது பள்ளிப்படிப்பு, சமூகத்தில் மற்றவர் களுடன் பங்கேற்பது, சக நண்பர்களுடன் தொடர்பாடல் மற்றும் விளையாட்டு செயல்பாடு ஆகியவற்றில் இணைவ தற்குத் தடையாக உள்ளது. எனவே, உங்கள் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர, தடுப்பூசி அவசியமாகிறது. பொதுவாக மக்கள் தொகையில் 25% குழந்தைகள் என்பதால், தடுப்பூசி போடுவது சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத்திறனை அடையவும் உதவுகிறது. இது குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயத்தையும், மாறுபாடு கொண்ட புதிய வைரஸ்கள் பரிணமிப்பதையும் குறைக்கிறது.’
No comments:
Post a Comment