பட்டுக்கோட்டை, ஜூலை 12- 4.7.2022 அன்று மாலை ஆறு மணி அளவில் பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக கூட்டம் பட்டுக் கோட்டை பேருந்து நிலையம் மெரினா உணவகம் மேல் மாடியில் திராவிடர் கழக பொதுச் செயலா ளர் இரா.செயக்குமார் தலைமையி லும், திராவிடர் கழக தஞ்சை மண் டல செயலாளர் குடந்தை க.குரு சாமி முன்னிலையிலும் நடைபெற் றது.
திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா. நீல கண்டன் கடவுள் மறுப்பு கூறிட, பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழக தலைவர் பொறியாளர் சிற்பி கோட்டை வை.சேகர் வரவேற்பு உரை ஆற்றிட, கலந்துரையாடல் கூட்டம் ஆரம்பமானது.
கூட்டத்தின் நோக்கம் குறித்து திராவிடர் கழக பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக கிராமப்புற பிரச்சார அமைப் பாளர் முனைவர் அதிரடி க.அன் பழகன் தெளிவாக விளக்கி உரை யாற்றினார்.
தொடர்ந்து மாவட்ட ப.க.செய லாளர் புலவஞ்சி இரா.காமராஜ்.மாவட்ட ப.க. அமைப்பாளர் மாணிக்க சந்திரன், மாவட்ட .ப.க.புரவலர் ஆசிரியர் சி.வேலு, மாவட்ட ப.க.தலைவர் ஆ.இரத் தினசபாபதி, மேனாள் மாவட்ட ப.க.செயலாளர் முனைவர் கரு. கிருட்டின மூர்த்தி, மதுக்கூர் ஒன் றிய ப.க.தலைவர் என்.கே.ஆர். நாராயணன், பேராசிரியர்கள் ஆர்.கே.முத்துராமன், த.சாதனா, மன்னங்காடு மா.சிவஞானம், மண்டலக்கோட்டை சரவணன், மாவட்ட மாணவர் கழக தலைவர் இரா.அன்புச்செல்வன், மதுக்கூர் ஒன்றிய கழக செயலாளர் இராஜ் குமார், சேதுபாவாசத்திரம், ஒன் றிய இளைஞரணி தலைவர் சு.வசி, மாவட்ட மகளிரணி தலைவர் அத்தி வெட்டி மாலதி வீரையன். மதுக்கூர் மா.நெல்சன், பள்ளத்தூர் ஆ.சண்முகவேல், மாவட்ட இளை ஞரணி செயலாளர் கா.தென்ன வன், மாவட்ட கழக அமைப்பாளர் சோம.நீலகண்டன், மாவட்ட கழக துணை செயலாளர் அ.காளிதாசன், மாவட்ட கஜக வழக்குரைஞர் பட் டுக்கோட்டை அ.அண்ணாத்துரை, கழக பொதுக்குழு உறுப்பினர் பள் ளத்தூர் அரு.நல்லதம்பி, மாவட்ட கழக செயலாளர். மல்லிகை வை. சிதம்பரம் மண்டல கழக செயலா ளர் குடந்தை க.குருசாமி ஆகியோர் உரையாற்றினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் எண். 1: மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் குழு கூட்டத் தீர்மானங்களை முழு மனதுடன் ஏற்று செயல்படுத்துவது என இக்கூட்டம் முடிவு செய்கின் றது.
தீர்மானம் எண். 2: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உல கின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழில் ஆசிரியராக பொறுப்பேற்று 60 ஆண்டு ஆவதை ஒட்டி 60 ஆயிரம் சந்தாக் களை சேர்த்து வரும் ஜூலை மாதம் 30 ஆம் தேதிக்குள் வழங்கு வது என்ற தீர்மானத்தின் படி நமது பட்டுக்கோட்டை கழக மாவட் டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1500 சந்தாக்களை திரட்டி வழங்கு வது என இக்கூட்டம் ஒரு மனதாக முடிவு செய்கின்றது.
தீர்மானம் எண். 3: வரும் ஜூலை 30ஆம் நாள் அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் நமது கழக மாவட்டத்தின் சார்பில் மூன்று வாகனங்களில் சென்று கலந்து கொள்வது என இக்கூட்டம் ஒருமனதாக முடிவு செய்கின்றது.
தீர்மானம் எண். 4: அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் நமது மாவட்ட கழக இளைஞரணி தோழர்கள் சீருடையுடன் கலந்து கொள்வது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் எண். 5: கழக புதிய பொறுப்பாளர்கள் பட்டுக் கோட்டை நகர திராவிடர் கழக செயலாளர் கா.தென்னவன், நகர திராவிடர் கழக அமைப்பாளர் அ.இரவிக்குமார், சேது பாவா சத்திரம் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் பள்ளத்தூர் ஆ.சண் முகவேல், பேராவூரணி நகர இளை ஞரணி அமைப்பாளர் நாட்டா ணிக் கோட்டை வினோத்குமார்.
No comments:
Post a Comment