'ஆனந்த விகடன்' வார இதழில் மலையாளத் திரையுலகின் மலைக்க வைக்கும் படைப்பாளி அடூர் கோபால கிருஷ்ணன் அவர்கள் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் “தமிழக அரசியலையும், ஆட்சியையும் கவனிக்கிறீங்களா?” என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:
“நிச்சயமா. தமிழ்நாட்டைப் பற்றிய செய்திகளைத் தொடர்ச்சியா தெரிஞ்சுக்கிறேன். மு.க.ஸ்டாலின் அற்புதமாக ஆட்சிசெய்கிறார். நிதி நிர்வாகத்துல தமிழ்நாட்டை கேரளம் உதாரணமா எடுத்துக்கணும்.
பொருளாதாரம் படிச்ச ஒருத்தரை நிதியமைச்சரா உங்க முதலமைச்சர் நியமிச்சிருக்கிறார். அது எவ்வளவு பெரிய விஷயம்.
தேசத்தின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு நிறைய. பல இடங்கள்ல மக்களுக்காக ஒதுக்குற பணம் எங்க போகுதுன்னு தெரியாது. ஆனா, தமிழ்நாட்டுல சமூகநீதி இருக்கிறதால, அரசு ஒதுக்குற பணம் மக்கள் நலத்திட்டங்களுக்குப் போய்ச் சேருவது கண்கூடாத் தெரியுது. பள்ளி இடைநிற்றல் பழங்குடியினர் மத்தியில் அதிகமா இருக்கு. அவங்களை மய்ய நீரோட்டத்துக்குக் கொண்டு வரணும். அது இங்க சரியா நடக்குது.
நன்றி: 'ஆனந்த விகடன்', 27.7.2022
No comments:
Post a Comment