வெப்ப ஆற்றலை சேமிக்கவேண்டும். சேமித்த வெப்பத்தை, பல மாதங்கள் கழித்து, மின்சாரமாக மாற்ற வேண்டும். முடியுமா? அப்படி ஒரு வெப்ப ஆற்றல் சேமிப்பு முறையை, பின்லாந்தைச் சேர்ந்த, 'போலார் நைட் எனர்ஜி'யின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மின்சாரத்தை வெப்பமாக மாற்றி, மணலை சூடாக்குவதன் மூலம் வெப்பத்தை சேமிக்கலாம். மணலில் சேமித்த வெப்பம் 99 சதவீதம்விரயமாகாமல் பல மாதங்கள் இருக்கும். அந்த வெப்பத்தை பிறகு மின்சாரமாக மாற்றலாம். அண்மையில், பின்லாந்தில் 8 மெகாவாட் மணி அளவுக்கு மின்சாரத்தை தயாரிக்கும் , மணல் பேட்டரி செயல்படத் துவங்கியுள்ளது.
No comments:
Post a Comment