டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து மோடி அரசை எதிர்த்து போராட, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வேண்டுகோள்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
ஆகம விதிகளை கோயில்கள் பின்பற்றும் முறை குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்திட தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சர்ச்சை வார்த்தைகளைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் வெளியே உறுப்பினர்கள் போராட்டம் நடத்த மோடி அரசு தடை விதிப்பது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது, சரத்பவார் கண்டனம்.
தி டெலிகிராப்:
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.80 என கடும் வீழ்ச்சி. ஊழல் ஆட்சியாளர்கள் உள்ள நாடுகளில்தான் கரன்சிகள் வீழ்ச்சியடையும் என பிரதமர் ஆவதற்கு முன் நரேந்திர மோடி கூறியதையும் காங்கிரஸ் கட்சி நினைவு கூர்ந்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
தேசிய தரவரிசையில் சென்னை அய்அய்டி நான்காவது ஆண்டாக முதலிடம்: சென்னை மாநிலக் கல்லூரி அசத்தல். உயர்கல்வியில் நமது திராவிட மாடலின் மேன்மைக்கு அங்கீகாரம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment