திருச்சி துவாக்குடி NIT-இல் (தேசிய தொழில் நுட்பக் கழகம்) தேசிய மாணவர் படையின் விமானப்படை பிரிவு சார்பாக 10 நாட்கள் முகாம் நடைபெற்றது. திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக பங்கேற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள் மொத்தம் 20 பேர் கலந்து கொண்ட குழுவினர் பள்ளியின் தேசிய மாணவர் படையின் பொறுப்பாளர் இ.அருண் அவர்களின் ஒருங்கிணைப்பில் பயிற்சியை முடித்தனர். முகாமில் பங்கேற்ற 8 பள்ளிகளில் ஒழுக்கத்தில் சிறந்த பள்ளியாக பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி தேர்வாகி முதல் பரிசினைப் பெற்றுள்ளது. பள்ளி முதல்வர் மாணவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டுதான் பள்ளியில் தேசிய மாணவர் படை செயல்படத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, July 18, 2022
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment