வாஸ்துவின் பலனா? வாஸ்து ஜோதிடர் படுகொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

வாஸ்துவின் பலனா? வாஸ்து ஜோதிடர் படுகொலை

மும்பை, ஜூலை 7- மும்பை நகரம் முழுவதும் மிகவும் பிரபலமான சந்திரசேகர் குருஜி என்ற சாமியார் கருநாடகா சொகுதி விடுதியில் கொலை செய்யப்பட்டார். தவறான உறவு மற்றும் மோசடி சொத்துக் களைப் பிரிப்பது தொடர்பான விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மும்பையில் உள்ள அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் மிகப் பெரிய அளவில் சாமியார் சந் திரசேகர் என்பவரது படம் போட்டு விளம்பரப்படுத்தி இருப்பார்கள். 

வாஸ்து, ஜோசியம், யாகம், செய் வினை, பில்லி சூனியம், நவரத்தினக் கற்கள், ராசிக்கற்கள் கொண்டு ஜோதிடம் என பலவகையில் விளம் பரங்களில் காணப்படும்

இவருக்கு ஊட்டி முதல் குளு, மனாலி மற்றும் சிம்லா என பல கோடை சுற்றுலா பண்ணை வீடுகளும் பங்களாக்களும் உள்ளன.

தனது உறவினர் ஒருவர் மரண மடைந்ததைத் தொடர்ந்து கரு நாடகா மாநிலத்தின் ஹூப்ளி வந்த அவர் அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.


சந்திரசேகர் தங்கியிருந்த விடு திக்கு வந்த சில நபர்கள் இரண்டு பேர் வரவேற்பறையின் அருகே  வைத்து அவரை சரமாரியாக வயிற்றில் குத்தி கொலை செய்துள் ளனர். இதற்கிடையே கொலையா ளிகள் 2 பேரும் பெலகாவி மாவட் டத்துக்கு காரில் சென்றது தெரிய வந்தது. அதனடிப்படையில் விசா ரித்த காவல்துறையினர் ராமதுர் காவில் 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மகாந் தேஷ் சிரூரு மற்றும் மஞ்சுநாத் முரேவாட் என்பது தெரியவந்தது. இதில் மகாந்தேஷ் சிரூரு மற்றும் அவரது மனைவி வனஜாக்சி ஆகி யோர் சந்திரசேகர் குருஜியின் வாஸ்து நிலையத்தில் பணியாற்றியது தெரிய வந்தது. 

தொடர்விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்தன, சந்திர சேகர் பல சுற்றுலாத்தலங்களில் சொகுசு பங்களா வாங்கிக்குவிக்கும் ஆசை கொண்டவர், ஆகையால் இவருக்கு தமிழ்நாட்டின் ஊட்டி, மகாராட்டிராவின் லோனாவாலா, ஹிமாச்சல் பிரதேசத்தின் குலு மனாலி சிம்லா மற்றும் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் போன்ற நகரங்களில் பங்களாக்கள் உள்ளன. இந்த பங்களாக்களுக்கு பெண்களை அழைத்துச்செல்வது வழக்கம். இவர்களுக்கு பெண்களை தருவித் துக் கொடுப்பதற்கு உதவியாக வன ஜாக்சி என்ற பெண் இருந்தார். 

அவரது ஆசிரமத்தில் மகாந் தேஷ் மற்றும் மஞ்சுநாத் போன் றோர் இருந்தனர். இவர்கள் சாமி யாருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஆதலால் இவர்களை பினாமியாக போட்டு சொத்துக்களை இவர்கள் பெயரில் எழுதிவைத்தார். மேலும் தனது பெண் உதவியாளரான வன ஜாக்சிக்கு மகாந்தேஷை திருமணம் செய்துவைத்து அவர்கள் பெயரில் பினாமி சொத்துக்களை எழுதி வைத்தார். 

 இந்த நிலையில் வனஜாக்சி சாமியாரிடம் இருப்பது பிடிக்கா மல் தனது கணவரோடு சென்றுவிட முடிவு செய்தார். இதனைத் தெரிந்து கொண்ட சாமியார் தன்னிடமி ருந்து விலகவேண்டுமென்றால் உனக்கு எழுதிவைத்த சொத்துக் களை எனக்கு கொடுத்துவிட்டுச் சென்றுவிடு என்று கூறியுள்ளார். மேலும் இவருக்கு கருநாடகா ஆளும் கட்சியில் முக்கிய பிரமு கர்கள் நன்கு அறிமுகம் என்பதால் அவர்கள் மூலம் கருநாடகா காவல்துறைக்கு தகவல் தெரிவித்து வனஜாக்சி மற்றும் மகாநதேஷ் ஆகியோருக்கு மிரட்டல் விட ஆரம்பித்தார். 

 இதனால் மகாதேஷ், வனஜாக்‌சி மற்றும் மஞ்சுநாத் மூவரும் சாமி யாரை விட்டு விலகிச்செல்ல முடிவு செய்தனர். இதனை அடுத்து சாமி யார் அவர்களை அழைத்து என் னைவிட்டுச்செல்லும் முன்பு என்னுடைய சொத்துக்கள் அனைத் தையும் திரும்பக்கொடுத்துவிடுங்கள் இல்லை என்றால் உங்களைக் கொலை செய்துவிடுவேன்" என்று மிரட்டியுள்ளார்.  அதே நேரத்தில் இவர்களும் சாமியாரின் காம லீலைகளை வெளியில் சொல்லி விடுவோம் என்றும், அதற்கான சான்றுகள் அனைத்தும் எங்களிடம் உள்ளன என்றும் கூறியுள்ளனர். 

இந்த நிலையில் சாமியார் மூவரையும் மகாராட்டிரமாநிலம் லோனாவாலாவில் வைத்து கொலை செய்ய ஆட்களை நிய மித்து விட்டது குறித்து அறிந்து கொண்ட இவர்கள் அதற்கு முன்பு சாமியாரைக் கொலை செய்ய திட்டமிட்டனர். 

மும்பையில் எந்த நேரமும் தனியார் பாதுகாப்பு ஆட்களுடன் நடமாடுவதால் மும்பையை விட்டு வெளியே கொலை செய்யத் திட்ட மிட்டனர். அதே போல் சாமியார் தனது சொந்த ஊரான தார்வாடில் தனக்கு ஊர்க்காரர்கள் பாதுகாப்பு தருவார்கள் என்று நினைத்து சென்றுள்ளார். அங்கு அவரது உறவினரின் சொகுதி விடுதியில் தங்கி இருப்பதை அறிந்துகொண்ட மகாதேஷ் மற்றும் மஞ்சுநாத் இருவரும் அங்கு சென்று அவருடன் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்து வதாக கூறி கொலை செய்தனர்.  பின்னர் அவர்கள் தப்பிச்செல்லும் வழியில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்தகொலையில் தேடப் பட்டு வரும் பெண்ணான வன ஜாக்சி தலைமறைவாகி உள்ளார்.

No comments:

Post a Comment