பென்சில், பேனா, நோட்டுப் புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க வாய்ப்பு இல்லை ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

பென்சில், பேனா, நோட்டுப் புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க வாய்ப்பு இல்லை ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர்

 புதுடில்லி. ஜூலை.26 பென்சில், ரப்பர், பேனா, நோட்டுப் புத் தகங்கள் முதலான கல்வி சார்ந்த உபகரணங்கள் மீது விதிக்கப்பட் டிருக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கு திட்டம் ஏதேனும் இருக்கிறதா?, மாற்றுத்திறனா ளிகள் பயன்படுத்தும் உபகரணங் களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை குறித்த அரசின் நிலைப்பாடு என்ன?பெட்ரோல், டீசல் முதலானஎரிபொருள் மீது விதிக்கப்பட்டிருக்கும் செஸ், சர்சார்ஜ் முதலான கூடுதல் வரிகளை உயர்த்தும் திட்டம் ஏதேனும் அரசிடம் இருக்கிறதா? ஆகிய கேள்விகளுக்கு ஒன்றிய நிதிதுறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒன்றிய மற்றும் மாநில அரசு களின் உறுப்பினர்களை உள்ள டக்கிய அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜிஎஸ்டி விகி தங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. பென்சில், பேனா, ரப்பர், நோட் டுப் புத்தகங்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் பரிந்துரை எதுவும் தற்போது இல்லை.

மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்தும் ஊன்றுகோல், அறுவை சிகிச்சை பெல்ட்கள் முதலான சாதனங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

பெட்ரோலியப் பொருட் களின் மீதான கலால் வரி விகி தங்கள் (செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் உட்பட) உள் கட்டமைப்பு மற்றும் பிற மேம் பாட்டுச் செலவினங்களுக்கான ஆதாரங்களை உருவாக்கும் நோக்கத்துடன், பன்னாட்டு உற் பத்தி நிலவரம் போன்ற அனைத்து தொடர்புடைய காரணிகளையும் கணக்கில் கொண்டு அவ்வப் போது நிர்ணயம் செய்யப்படு கின்றன. விலைகள், மாற்று விகிதம், வரி அமைப்பு, பணவீக்கம் மற்றும் தற்போதைய நிதி நிலை மையைக் கருத்தில் கொண்டு அது முடிவு செய்யப்படுகிறது, ஆகவே பேனா பென்சில் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படாது என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.


No comments:

Post a Comment