2.7.2022, 3.7.2022 ஆகிய இரு நாட்களிலும் நடைபெற்ற முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும் தமிழ் நாடு காங்கிரசின் மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கும் வாழ்த்துரை வழங்கிய பெருமக்களுக்கும் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்த திராவிடர் கழகத் தோழர்களுக்கும் தோழமைக் கட்சி நண்பர்களுக்கும் பொத்தனூர் பொதுமக்களுக்கும் உற்றார் உறவினர்களுக் கும் கெழுதகை நண்பர்களுக்கும் நூற்றாண்டு விழா மலருக்கு விளம்பரம் கொடுத்து உதவிய நண்பர்களுக்கும் கவிதை, கட்டுரை வழங்கியோர்க்கும், மலரைச் சிறந்த முறையில் உருவாக்கி அளித்த விடுதலை அச்சகத் தோழர்களுக்கும், இரண்டு நாட்களாக உணவு சமைத்துப் பரிமாறிய தோழர்களுக்கும் உடனிருந்து பணிகளைக் கவனித்து உறுதுணை புரிந்த நண்பர்களுக்கும், க.ச. அய்யாவின் குடும்பத்தார் சார்பிலும் விழாக் குழுவினர் சார்பிலும் மனங்கனிந்த நன்றியை மகிழ்வோடு உரித் தாக்குகிறோம். நன்றி!
பழனிபுள்ளையண்ணன் பேராசிரியர் ப.காளிமுத்து
ஈரோடு த.சண்முகம் வழக்குரைஞர் ப.இளங்கோ
பொத்தனூர் ம.சிவக்குமாரன்
No comments:
Post a Comment