சென்னை, ஜூலை 9 - தமிழ்நாட்டில் தங்களது ஆலையை அமைக்க முன்வரும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு விரைந்து அனைத்து அனு மதி பெற்றுத்தரப்படும் என்று மாநில அரசின் சிறுகுறு நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் வி.அருண் ராய் கூறினார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் நேற்று (8.7.2022) பார்மக் சவுத், என்ற மருந்து நிறுவனங்களின் கண்காட்சியை தொடங்கிவைத்துப்பேசிய அவர், திண்டி வனத்தில் அமைய உள்ள மருந்து உற்பத்தி பூங்காவில் தொழில்தொடங்க நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்றார். சென்னையை சுற்றி நிறுவனங்களை அமைப்பதை கைவிட்டு மதுரை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 2ஆம் நிலை மற்றும் 3 நிலை நகரங்களிலும் ஆலைகளை அமைக்கவேண்டும் என்றுஅவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நிறுவனங்களுக்கான மாநில அரசின் வழிகாட்டி அதி காரி தேப்லீனா சக்கரவர்த்தி தமிழ்நாட்டில் புதிதாக நிறுவனங்கள் தொடங்க முன்பு 90 நாட்கள் ஆனது. ஆனால் தற்போது 30 நாட்களில் அனைத்து அனுமதிகளும் வழங்கப்படும் என்றார்.
இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் (அய்டி எம்ஏ) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா கிளை இணைந்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. துவக்க நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் ஜெ.ஜெயசீலன், பேசுகையில் உலக அளவில் 5 மாத்திரைகளில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்றார். இரண்டு நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment