மாற்றுத்திறனாளிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு; வங்கிக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

மாற்றுத்திறனாளிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு; வங்கிக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 21- மாற்றுத் திறனாளிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வங்கிக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 

பெரம்பலூர் வங்கி கணக்கு முடக்கம் பெரம்பலூர் மாவட் டம், லெப்பைக்குடிகாடு பேரூ ராட்சி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது(வயது 45). மாற்றுத்திறனாளியான இவர், அதே ஊரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 2015ஆம் ஆண்டு வியாபார கடனாக ரூ.30 ஆயிரம் பெற்றிருந்தார். 3 ஆண்டு காலக்கெடுவில் அந்த கடனுக்கு மாத தவணையை சரியாக செலுத்தி வந்துள் ளார். இந்நிலையில் சாகுல் ஹமீது சரியாக மாத தவணை செலுத்தவில்லை என்று அவ ரது வங்கி கணக்கை முடக்கம் செய்துள்ளனர். அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் மாத உதவித்தொகை ஆகியவை அவரது வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டிருந்த நிலை யில், அந்த பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாமல் வங்கி கணக்கை முடக்கி வைத் ததால் அவர் பாதிக்கப்பட் டார். 

இது குறித்து சாகுல் ஹமீது, கடந்த 6.4.2017 அன்று பெரம்பலூர் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடை பெற்று வந்தது. 

இந்த நிலையில்,  வழக்கை விசாரித்த மாவட்ட நுகர் வோர் நீதிமன்ற நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர் கள் திலகா மற்றும் முத்துக் குமரன் ஆகியோர் தீர்ப்பு அளித்தனர். 

இதில், மனுதார ருக்கு வங்கி சேவை குறைபாட் டினால், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப் பீடாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவுத்  தொகைக்காக ரூ.5 ஆயிரமும்,    45 நாள்களுக் குள்  கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment