புதுடில்லி, ஜூலை 16 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20.044 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 145 நாட்களுக்கு பிறகு 14.7.2022 அன்று தினசரி கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து 20 ஆயிரத்து 139 ஆக பதிவானது. நேற்று தொடர்ந்து 2ஆவது நாளாக 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு (20 ஆயிரத்து 38) தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 20,044 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தி யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 044 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,37,30,071 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,660 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 18,301 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,63,651 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு தற்போது 1,40,760 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,99,71,61,438 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,93,627 பேர்) கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,17,895 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 86,90,33,063 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (அய்.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment