குரூப்-1 நேர்முகத் தேர்வு முடிவு வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

குரூப்-1 நேர்முகத் தேர்வு முடிவு வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை, ஜூலை 16    66 பணியிடங்களுக்கான குரூப்-1 நேர்முகத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 

18 துணை ஆட்சியர், 19 துணை காவல் கண்காணிப்பாளர், 10 வணிகவரித் துறை உதவி ஆணையர், 14 கூட்டுறவு துறை துணை பதி வாளர், 4 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், மாவட்ட தீய ணைப்பு துறை அதிகாரி உள்பட குரூப்-1 பதவிகளில் காலியாக இருக்கும் 66 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.

இந்த பணியிடங்கள் முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 3-ஆம் தேதி நடந்தது. 

இந்த தேர்வை ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள். அதில் தகுதி பெற்ற 3 ஆயிரத்து 104 பேர் அதற்கு அடுத்த படியாக நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வில் கலந்து கொண்டனர். 

முதன்மைத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 4, 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவு கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

அந்த தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் பதவிகள் தொடர்பான விதிகளின் அடிப் படையில் நேர்முகத் தேர்வுக்காக 137 பேர் தற்காலிகமாக அழைக்கப் பட்டனர். அவர்களுக்கான நேர் முகத் தேர்வு சென்னை பாரி முனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலக வளாகத்தில் கடந்த 13, 14 மற்றும் 15 (நேற்று) -ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. 

கடந்த 3 நாட்களாக நடந்து வந்த நேர்முகத் தேர்வு முடிவு நேற்று  (15.7.2022) மாலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. 

அதில் தேர்வர்கள் குரூப்-1 முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. நேர்முகத் தேர்வில் பங்குபெற்ற 137 பேரில் 135 பேரின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. 

அதில் 2 பேருடைய மதிப் பெண்களை மட்டும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிடாமல் நிறுத்தி வைத்தி ருக்கிறது. இந்த 135 பேரின் மதிப் பெண்ணை வைத்து பார்க்கும் போது, முதன்மைத் தேர்வில் 494.25, நேர்முகத் தேர்வில் 67.50 என மொத்தம் 561.75 மதிப்பெண் பெற்ற பெண் தேர்வர் முதல் இடத்தை பிடித்து இருப்பது தெரியவந் துள்ளது. 

No comments:

Post a Comment