தஞ்சாவூர், ஜூலை 9 சிறார் திரைப்பட விழாவுக்காக, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,000 பள்ளிகளை தேர்வு செய்துள்ள தாகவும், திரைப்படம் திரையிடுவ தற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஆசிரியருக்கு பயிற்சி அளிக்கப்பட வுள்ளதாகவும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள் ளார்.
தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 6.7.2022 அன்று செய்தியாளர்களைச் சந்தித் தார். அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது: "இதுபோன்ற திரைப் படங்கள் திரையிடப் பட்டு,மாண வர்களின் கருத்துகளை உள்வாங்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள் ளோம். இதுவொரு வெற்றிகரமான முயற்சியாக இருக் கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத் தம் 13 ஆயிரம் பள்ளிகளை தேர்வு செய்துள்ளோம். 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இத்திரைப்படங்கள் திரையிடப் படும். திரைப்படங்களை திரையிடு வதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியருக்கு பயிற்சியளிக்கப் பட்டு இந்த பணியில் ஈடுபடுவார்கள்.
திரைப்படங்களைப் பார்த்த பின்னர், மாணவர்களிடமிருந்து வரும் ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் விமர்சனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். திரைத்துறை சார்ந்த வித்தகர் களு டன், கிராமப்புற, நகர்ப்புறங் களில் இருந்து வருகின்ற தேர்வு செய்யப் பட்ட மாணவர்கள் கலந் துரையாடு வார்கள்.
இந்த உரையாடல் முடிந்த பின்னர், அதில் சிறந்த விமர்சனமாக எதை தேர்வு செய்கிறோமோ, அதி லிருந்து ஒரு 15 பேர் தேர்வு செய்யப் பட்டு, அவர் கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்" என்று அவர் கூறினார்.

No comments:
Post a Comment