ராஞ்சி, ஜூன் 15- ஒன்றிய மற்றும் வட இந்தியாவில் உணவுதானியங்களின் தட்டுப்பாடு வெளிப்படத்துவங்கி உள்ளது, தொடர்ந்து விவசாயத் தொழிலில் ஏற்பட்ட சரிவு, மற்றும் ஒன்றிய அரசின் திட்டமிடப்பதாக தானியக்கொள்முதல் போன்றவை களால் கையிருப்பு தானியங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக ஒன்றிய அரசின் கரீப் கல்யான் என்ற திட் டத்தின் கீழ் வழங்கும் உணவு தானி யம் வழங்கலில் சரிவு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உணவுதானியத் தட்டுப்பாட்டை மறைக்கும் வித மாக போதிய உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய உணவுத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறுகையில், உலகின் மிகப்பெரிய அளவில் அரிசி ஏற்று மதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. நம்மிடம் ஏராளமான அரிசி இருக்கிறது. அதனால் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை.அதனால் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று கூறியுள்ளார்.
உள்நாட்டில் அரசி தட்டுப்பாடு உருவாகிக்கொண்டு இருக்கிறது, துவக்க நிலையிலேயே இதனை சரிசெய்யவேண்டும், ஆனால் ஒன்றிய அரசு அதானி உள்ளிட்ட சிலரின் உணவு தானிய ஏற்றுமதி சுணங்கிவிடக்கூடாது என்பதற் காக அரிசி ஏற்றுமதியை தடை செய்யாமல் உள்ளது.
மேலும் மக்களிடையே தங்க ளின் உணவுதானிய சேமிப்புக் கொள்கை தோல்வியில் முடிந்தது வெளியில் தெரியாமல் இருக்க உண்மைக்கு புறம்பான புள்ளிவிப ரங்களோடு அரிசி உள்ளிட்ட உணவு தானியம் கையிருப்பில் உள் ளதாக கூறி ஒன்றிய அரசு வருகிறது
No comments:
Post a Comment