தருமபுரி,ஜூன்11- தேசிய வேலை உறுதியளிப்புத்திட்டத்தில் ஒருங் கிணைப்பாளராக பணியாற்றுவதற்கு மேனாள் மக்கள் நலப்பணியாளர்கள் விருப்பக் கடிதத்தை இம்மாதம் 13 முதல் 18ஆம் தேதிக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளதாவது:
ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையில் 8.11.2011 அன்று மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப்பணியாளர்கள் தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியில் ஈடுபட வாய்ப் பளித்துள்ளது.
இப்பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து ரூ.5000/-ம், கூடுதலாக கிராம ஊராட்சிப் பணிகளுக்காக ரூ.2500/- ஆக மொத்தம் ரூ.7500/- மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த தொகுப்பூதியம் வழங்கப்படும்.
எனவே, 8.11.2011 அன்று பணியிழந்த இப்பணியில் ஈடுபட விருப்பம் உள்ள மேனாள் மக்கள் நலப்பணியாளர்கள் தாங்கள் ஏற்கெனவே பணிபுரிந்த வட்டாரத்தின் வட்டார வளர்ச்சி அலு வலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது.
மேலும், இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) ஏற்கனவே பணியாற்றியதற் கான விவரத்துடன் பணியில் ஈடுபட வுள்ளதற்கான விருப்பக் கடிதத் தினையும் வட்டார திட்ட ஒருங் கிணைப்பாளர் / வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) 13.06.2022 முதல் 18.06.2022-க்குள் வழங்கலாம். அவ்வாறு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிப்பவர்களது விருப்பக் கடிதம் பரிசீலிக்கப்பட்டு 1.07.2022 முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
எனவே 8.11.2011 அன்று பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப் பணியாளர்கள் இப்பணி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள 13.06.2022 முதல் 18.06.2022க்குள் தவறாமல் தங்களது விருப்பத்தினை தெரிவிக்கு மாறும் அத்ததைய விருப்ப விண்ணப் பங்கள் மட்டுமே இப்பணியில் ஈடுபட பரிசீலிக்கப்பட வுள்ளதால் குறிப்பிட்ட காலத்திற்குள் விருப்பம் தெரிவிக்கவும், காலம் கடந்து வரப் பெறும் விண் ணப்பங்களை பரிசீலிக்க இயலாது என்பதால் குறித்த காலத்தில் விண் ணப்பித்து இப்பணி வாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment